ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான தொடர் முயற்சியில் ஈடுபடுவேன்: பொன்.ராதாகிருஷ்ணன்
காஞ்சிபுரம்: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்: என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.பொன்.ராதாகிருஷ்ணன்
காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழக வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டினை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து விட்டார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.அதற்கான முயற்சியில் தொடர்ந்து நான் ஈடுபடுவேன். தமிழகத்தில் உள்ள சில அமைப்புகளே ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ளன. ஆகையால் இந்த பிரச்சினையை நிதானமாக தான் கையாள வேண்டும் என்று அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications