ஓபிஎஸ் அணி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகரன் வீட்டில் ஐடி ரெய்டு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகரன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள பிரபாகரன் வீட்டில் ஐ.டி
அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 2011-2016 சென்னை வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக ஜே.சி.டி பிரபாகரன் இருந்தார். 2016 சட்டசபை தேர்தலின் போது கொளத்தூர் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். ஸ்டாலினிடம் அவர் தோல்வியடைந்தார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓபிஎஸ் அணி சசிகலா அணி என அதிமுக பிளவுபட்டுள்ளது. ஜேசிடி பிரபாகரன் ஓ. பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications