ஆர்.கே. நகரில் எப்போது தேர்தல் வந்தாலும் தினகரன்தான் வேட்பாளராம்... ஃபெரா கேஸ்ல உள்ளே போனால்?
ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான் தான் வேட்பாளர். நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் ஓராண்டுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வேட்பாளர் என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஃபெரா வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் தீர்ப்பு அவருக்கு பாதகமாக வந்து அவர் சிறைக்குப் போனால் எப்படி போட்டியிடுவார் என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வரலாறு காணாத பணப்பட்டுவாடாவினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்த ஆவணங்களில் ரூ. 89 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக பட்டியல் கிடைத்தது. இதுவே தேர்தல் ரத்தாக காரணமாக அமைந்தது.
எனினும் தேர்தல் ரத்துக்கு பலரும் தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகின்றனர். பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யாமல் ஏன் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

டிடிவி தினகரன்
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று சென்ற டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மாவின் வேட்பாளர் நான் தான் என்றார்.

எதையும் சந்திப்பேன்
தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருவது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், இவர்களால் தகுதி நீக்கம் செய்ய முடியாது. நீதிமன்றம் தான் சென்றாக வேண்டும். எது வந்தாலும் அதனை சந்திப்பேன்.

நான்தான் வேட்பாளர்
எப்போது ஆர்.கே.நகர் தேர்தல் நடந்தாலும் நான் தான் அம்மாவின் வேட்பாளர். நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதாலே அவர் ஆர்.கே. நகரை சுற்றி வருகிறார்.

விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து விட்டார் என்றும் அவர் மாற்றப்படலாம் என்று செய்தி பரவுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அது வதந்தி என்று கூறினார். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என்றார்.

பொதுத்தேர்தல்
விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரோ கேட்டதற்கு அவர் எப்போது ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்? என்று கேட்டார் டிடிவி தினகரன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications