பொது அறிவை வளர்க்க வேண்டும்.. கடுமையாக உழைக்க வேண்டும்.. மாணவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி அட்வைஸ்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முகமது அசரப் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர்கள் பேசும்போது படிக்கும் காலத்திலே நாம் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். கடின உழைப்பும் விடா முயற்சியும், இருந்தால் எதிலும் எளிதாக வெற்றி பெற முடியும்.

ஒழுக்கத்துடன் கூடிய கடின உழைப்பு நாம் உயர்ந்த நிலையை அடைவதற்கு வழி வகுக்கும். படிக்கும்போதே நாம் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் அந்நிலையை அடைய முழு முயற்சி எடுக்க வேண்டும். சிறந்த முயற்சியே வெற்றியை தரும் என்று கூறினார்.

பைத்துல்மால் மையத்தின் செயலர் ஜமால் ராஜா அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வு முறை, அத்தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறைகள் சம்பந்தம்பான கேள்விகளை கேட்டனர்.

மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் மிகச்சிறப்பாகவும், தெளிவாகவும், விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் கீதா சுந்தரேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் அவர்கள் செய்திருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications