தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: செய்தித் துறை செயலராக உதயச்சந்திரன் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன முதன்மை இயக்குநராக கே.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளராக இருந்து வந்தார்.

IAS officers transfered

மாநில ஊரக கிராமப்புற சுகாதார குழுவின் திட்ட இயக்குநராக, பெரம்பலூர் மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் தாரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்

தொழிற்சாலை ஆணையர், தொழில் வர்த்தக துறை இயக்குநராக அம்புஜ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை மத்திய அரசுப் பணியில், கனரகத் தொழிற்சாலைத் துறையின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

நிதித்துறை (செலவீனங்கள்) செயலாளர் உதயச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரிய செயல் இயக்குநராக இருந்து வந்தார்.

நகராட்சி நிர்வாக இணை ஆணையர் ஆசியா மரியம், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (கல்வி) செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+