பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்... இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடிக்க எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 12ம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகின.

    IDJ announces black flag protest against Modi on his Chennai visit

    சென்னையை அடுத்து மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளார். ஒரு நாள் பயணமாக 12-ந் தேதி அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பிரதமரின் சென்னை வருகையின் போது அவருக்கு கருப்புக்கொடி காட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி டிவிட்டரில் கூறியுள்ளதாவது:

    "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி எதிர்வரும் 12ம் தேதி காலை 11:30 மணிக்கு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் தரை மார்க்கமாக அடையாறு செல்லும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+