இப்ப மட்டுமல்ல ஏப்ரலிலும் கூட மக்களின் ஆதரவு தினகரனுக்குத் தானாம்... ராஜநாயகம் சர்வே கணிப்பு!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் மாத்தில் நடந்திருந்தால் யார் வெற்றி பெற்றிருப்பார்கள் என்ற ஆய்விலும் டிடிவி. தினகரனே முன்னிலை வகிப்பதாக மக்கள் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Recommended Video
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடந்திருந்தால் டிடிவி. தினகரனே வெற்றி பெற்றிருப்பார் என்று அப்போதைய கருத்துக்கணிப்பின் முடிவையும் பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு வெளியிட்டுள்ள முடிவுகளில் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் ஆய்வு சார்பில் பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் குழுவினர் இணைந்து ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் குறித்து கள ஆய்வு மேற்கொடுள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிகறு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலிலும், தற்போது நடைபெறும் தேர்தலுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதிமுக இரண்டாக உடைந்து தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் செயல்பட்டனர். தற்போது நடைபெறும் தேர்தலில் அதிமுக ஒன்றுபட்ட நிலையில் தினகரன் கழட்டி விடப்பட்டுள்ளார். கட்சியின் பெயர், சின்னம் என அனைத்தும் தினகரன் கையில் இல்லாத நிலையில் தற்போது தேர்தலை சந்திக்கிறார்.
டிடிவிக்கே ஆதரவு
இத்தகைய சூழலில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்திருந்தால் பெரும்பான்மையான ஆதரவு டிடிவி. தினகரனுக்கே சென்றிருக்கும் என்று தெரிகிறது. ஏப்ரலில் யாருக்கு வாக்களித்திருப்பீர்கள் என்று யூகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிடிவி தினகரனுக்கே முன்னிலை இடம் கிடைத்திருக்கிறது.
அப்போதும் மதுசூதனனுக்கு 3வது இடம் தான்
அதாவது 38.2 சதவீத வாக்குகள் பெற்று தினகரன் முதல் இடத்திலும், 27 சதவீத வாக்குகளுடன் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில் அப்போது போட்டியிட்ட மதுசூதனனுக்கு 18.3 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யார் வெற்றி பெற்றிருப்பார்கள் என யூகம்
இதே போன்று ஏப்ரலில் யார் வெற்றி பெற்றிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு டிடிவி. தினகரன் வெற்றி பெற்றிருப்பார் என்று 43.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மருதுகணேஷ் வெற்றி பெற்றிருப்பார் என்று 25.6 சதவீதம் பேரும், மதுசூதனன் வெற்றி பெற்றிருப்பார் என்று 19 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
திமுகவிற்கு 2வது இடம்
ஏப்ரல் இடைத்தேர்தலின் போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இன்று வாள்ளதிப்பதாக இருந்தால் யாருக்கு ஆதரவாக வாக்களித்திருப்பீர்கள் என்று நடத்தப்பட்ட ஆய்விலும் டிடிவி. தினகரனுக்கே மக்களின் ஆதரவு இருந்துள்ளது. 35.4சதவீதம் பேர் டிடிவி. தினரகனுக்கு வாக்களித்திருப்போம் என்றும், 25.9 சதவீதம் பேர் மருதுகணேஷிற்கும், 20.6 சதவீதம் பேர் மதுசூதனனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.