எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை.. விஷால் அதிரடி!
எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.
ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் முதல்முறையாக அரசியல் களம் காண்கிறார் விஷால். ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்த விஷால் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அடிப்படை வசதிகள் தேவை
அப்போது சட்டத்தை மீறி தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவர் தெரிவத்தார். மக்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை என்பதே எங்கள் கொள்கை என்றும் அவர் கூறினார்.
எல்லாமே சரியாக நடந்திருந்தால்
எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார். மேலும் மக்களின் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் வாக்கு கேட்கவுள்ளேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
மக்களில் ஒருவனாக போட்டி
திரைத்துறையினர் யாரும் எங்களை எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் மக்களில் ஒருவனாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் நடிகர் விஷால் கூறினார்.
சொன்னதை செய்து உள்ளோம்
தயாரிப்பாளர் சங்கத்தில் நாங்கள் சொன்னதை செய்து உள்ளோம் என்றும் விஷால் கூறினார். மேலும் ஆளும் கட்சி மீது தான் புகார் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் மக்களே குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்றும் விஷால் தெரிவித்தார்.
நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது
அசோக்குமார் தற்கொலை குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் நடிகர் விஷால் கூறினார். இதனிடையே விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினா செய்யக்கோரி இயக்குநர் சேரன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.