இடைத்தேர்தல் நடத்தாவிடில் 3 லட்சம் பேருடன் போராட்டம் நடத்தப்படும்... தங்க தமிழ்ச்செல்வன் மிரட்டல்!
தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கை வாபஸ் பெற்றால் சிறப்பாக இருக்கும் என தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தேனி: தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கை வாபஸ் பெற்றால் சிறப்பாக இருக்கும் என தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடத்தாவிடில் 3 லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற கருத்து கேட்கும் கூட்டத்தில் தங்கதமிழ்ச்செல்வன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய, மாநில அரசு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டது.
தகுதி நீக்க வழக்கில் பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கை வாபஸ் பெற்று கொண்டு எனது தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.

எம்எல்ஏ பதவி தேவையில்லை
மக்களுக்கு பயன்படாத எம்எல்ஏ பதவி எனக்கு தேவையில்லை. தங்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றாலும், செல்லாது என்றாலும் அரசுக்கு நெருக்கடி தான் என தெரிவித்துள்ளார்.

காலம் தாழ்த்தும் முயற்சி
ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்காமல் நீதிபதிகள் ஆளுக்கொரு தீர்ப்பு வழங்கிவிட்டனர். இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை கூறியுள்ளதால் இது வழக்கை காலம் தாழ்த்தும் முயற்சியாக உள்ளது.

தினகரனிடம் சொல்விட்டேன்
மூன்றாவது நீதிபதியை எப்போது நியமிப்பார்கள், எப்போது இறுதி தீர்ப்பு வரும் என்று தெரியாது. ஆகையால் வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன். என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன், அவரும் ஏற்றுக்கொண்டார்.

தாய் கழகத்தில் இணைவோம்?
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தால் வரவேற்கிறேன் பாராட்டுகிறேன் என்ற முதல்வர் கூறிய கருத்துக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் பதிலளித்துள்ளார். எங்களின் முதல் கோரிக்கையே முதல்வரை மாற்ற வேண்டும் என்பது தான், அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி தாய் கழகத்தில் இணைவோம்?

ஜனநாயகம் 100% இல்லை
18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவித்த பிறகு நாங்கள் எதற்கு அதிமுகவில் இணைய வேண்டும்? நாட்டில் ஜனநாயகம் 100 சதவீதம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பாக இருக்கும்
இதர 17 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வழக்கு பற்றி முடிவு எடுக்கப்படும். 17 எம்.எல்.ஏ.க்களும் வழக்கை வாபஸ் பெற்றால் சிறப்பாக இருக்கும்.

போராட்டம் நடத்தப்படும்
ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இடைத்தேர்தல் நடத்தாவிடில் 3 லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

பொறுப்பிலிருந்து விலகவில்லை
கட்சி மாறி தாங்கள் யாரும் வாக்களிக்கவில்லை. அதேபோல் கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகவில்லை. இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications