சென்னை ஐ.ஐ.டி.வளாகத்தில் ஆராய்ச்சி மாணவி உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை: சென்னை கிண்டி ஐ.ஐ.டி. விடுதியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவியும், பேராசிரியர் ஒருவரின் மனைவியும் தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் பரப்பரபை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் புதுச்சேரியை சேர்ந்தவர் மகேஸ்வரி தத்துவவியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் நேற்று புதன்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதேசமயத்தில் ஐ.ஐ.டி.,யில் பேராரசிரியராக பணிபுரிந்து வரும் கணேசன் என்பவரின் மனைவியான விஜயலட்சுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே நேரத்தில் மாணவியும், பேராசியரின் மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஐ.ஐ.டி. வாளகத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி இறப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள ஐ.ஐ.டி. நிர்வாகம், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளது. போலீசார் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications