For Daily Alerts
Just In
பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.. இளையராஜா பேட்டி
இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என தொலைக்காட்சிக்கு இளையராஜா பேட்டி அளித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிப்பு. இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இளையராஜா தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றுள்ளார்.
மேலும் '' மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை, தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
Comments
English summary
2018 Padma awards have announced. Ilaiyaraaja gets 2018 Padma Vibhushan.
Story first published: Thursday, January 25, 2018, 20:50 [IST]