பிரிந்து சென்ற "ஏக்கத்தில்" மனைவி முகத்தில் ஆசிட் வீச்சு...கொடூர முன்னாள் கணவனுக்கு வலை வீச்சு...
Subscribe to Oneindia Tamil
சித்தூர் : சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்ட மனைவியை பழிவாங்க அவரது முன்னாள் கணவர் அந்தப் பெண் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலூர் கிராஸ் சாலை பகுதியில் நேற்று 38 வயது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பலர் பதற்றத்துடன் ஓடி வந்தனர்.

அந்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரித்த போது தனது முன்னாள் கணவர் காஜா ஹுசைன் தான் தன் மீது இருந்த கோபத்தால் இப்படி செய்து விட்டதாக அவர் அழுதபடி புலம்பினார்.
இதையடுத்து ஹூசைன் மீது வழக்கு பதிவு செய்துள்ள, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications