போதையில் பெண் பயணியிடம் அத்து மீறிய சப் இன்ஸ்பெக்டர் !! வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு !!!
திண்டுக்கல் : பேருந்தில் குடி போதையில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண் பயணியிடம் அத்து மீறிய காட்சிகள் வாட்ஸ் அப் வீடியோவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து குமுளிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் சென்றபோது அம்மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றும் ஒருவர் ஏறினார்.

பேருந்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்த போதும் குடி போதையில் இருந்த அந்த சப் இன்ஸ்பெக்டர் பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையில் உட்கார்ந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேறு இடத்தில் சென்று அமரும்படி சப் இன்ஸ்பெக்டரிடம் கூறினார். ஆனால் புல் மப்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ‘நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா? உன் பக்கத்துல நான் உட்கார கூடாதா?' என கேட்டுள்ளார்.
உச்ச கட்டமாக போதை தலைக்கேற அந்த சப் இன்ஸ்பெக்டர் அந்த பெண் மடியில் படுக்கவே, அதிர்ச்சி அடைந்த பெண் பயணி எழுந்து சத்தம் போட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சக பயணிகள் அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பேருந்தில் இருந்து இறங்கி சென்று விட்டார்.
இந்த சம்பவம் முழுவதையும் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ்அப்பில் பலருக்கும் அனுப்பியுள்ளார்.
காவல் துறை உடையில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் பெண்ணிடம் அத்துமீறிய அந்த காட்சி தற்போது வாட்ஸ்அப் மூலம் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications