தொடர் மழை... வீடு இடிந்து விழுந்து 5 பேர் பலியான சோகம் - வீடியோ
கிருஷ்ணகிரி அருகே தண்டிக்குப்பத்தில் ஓட்டு வீடு இடிந்து பக்கத்து குடிசை வீடு மீது விழுந்ததில் அந்த வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 5 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி: தொடர்மழையினால் கிருஷ்ணகிரி அருகே வீடி இடிந்து விழுந்ததில் பக்கத்து குடிசையில் இருந்தவர்கள் ஐந்து பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழைபெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே தண்டிக்குப்பம் ஊரில் மழையின் காரணமாக ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து சரிந்தது.

சரிந்து விழுந்த வீட்டின் சிதிலங்கள் பக்கத்து வீட்டில் இருந்த ஓலைக் குடிசை வீட்டின் மீது விழுந்துள்ளது. அதில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ராதா என்ற மூதாட்டி, புஷ்பா, மற்றும் வசந்தகுமார் என்ற சிறுவன், பகவதி, முல்லை என்ற இரு சிறுமிகள் இடுபாடுகளுக்கிடையில் சிக்கி உயிரிழந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க அங்கு வந்த அவர்கள், ஐந்து உடல்களையும்ம் மீட்டனர். பின்பு அவர்களது உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications