நெல்லையில் லஞ்சம் கேட்ட அதிகாரி.. கொடவுனில் சிறை வைத்த லாரி டிரைவர்!
மண் அள்ளுவதற்கு உரிய ஆவணங்கள் வைத்திருந்தவரிடம் கனிம வளத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால், லாரி ஓட்டுநரும் அவரது உதவியாளர்களும் அதிகாரியை சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: லாரியை மறித்து லஞ்சம் கேட்டதால் கனிம வளத்துறை அதிகாரிகளை ஜீப்புடன் சிறை வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை மண் போட்டு சமன் செய்து வருகின்றனர். இதற்காக முன்னீர்பள்ளம் உள்ளிட்ட இடத்தில் இருக்கும் குளத்தில், பூல் பாண்டியன் என்பவர் லாரி மூலம் மண் எடுத்து வரும் பணியைச் செய்கிறார்.

நேற்று மாலை அவர் வழக்கம் போல், மண் அள்ள வரும்போது கனிம வளத்துறை அதிகாரிகள் லாரியை பிடித்து சோதனை நடத்தி, 'ரூ.50 ஆயிரம் கொடுத்தால் லாரியை விடுவிப்போம், இல்லையென்றால் அபராதம் போடுவோம்' என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பூல் பாண்டி தன்னிடம் அனைத்து ஆவணங்களும் இருக்கிறது என கூறியும் அதிகாரிகள் பணம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூல் பாண்டியனும் அவரது உதவியாளர்களும், தனியார் குடோனின் இரும்பு கேட்டை அதிரடியாக பூட்டி அதிகாரிகளை சிறை வைத்தனர்.
இதனால் அவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெரியசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து அதிகாரிகளை மீட்டனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். லஞ்சம் கேட்ட அதிகாரிகளை சிறை வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications