வஞ்சிரம்.. இறால்.. வவ்வால் மீன்களுடன் கரைதிரும்பிய மீனவர்கள்.. காசிமேட்டில் குவிந்த மக்கள்!
கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர்.
Recommended Video
சென்னை: ஒரு வாரத்திற்கு பின்னர் கடலுக்கு போன மீனவர்கள் வித விதமான மீன்களுடன் கரை திரும்பினர். இதனால் காசிமேடு துறைமுக பகுதியே கூட்டநெரிசலுடன் காணப்பட்டது.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜுன் 14ம்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்களும், பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் இந்த தடைக்காலமான 60 நாட்களுக்கு கடலில் இறங்கி மீன்பிடிக்க செல்லவில்லை.
உற்சாகமாக போன மீனவர்கள்
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. அதனால் அன்று நள்ளிரவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல போகிறோம் என உற்சாகமானார்கள். ஆழ்கடலில் மீன்பிடிக்க தேவையான மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள், கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான டீசல், மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள் என அனைத்தையும் தங்களது படகுகளில் நிரப்பி வைத்துக் கொண்டனர்.
மீன்போக்குவரத்து இல்லை
அத்துடன் கொண்டு வந்த சொற்ப மீன்களையும் வாங்க மீன்வியாபாரிகளும் முன்வரவில்லை. இதனால் விலைவீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மீனவர்களுடன் மீன்பிரியர்களும் சேர்ந்தே கவலையில் உள்ளனர். ஆனால் கடலில் மீன்போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற மீனவர்கள் கூடுதல் மீன்கள் கிடைக்காததால் இரண்டே நாட்களில் வாடிய முகத்துடன் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
வஞ்சிரம், இறால், வவ்வால்
குறைந்த அளவே மீன்களை பிடித்ததால் அதை மீன்வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. விலையும் அதிகரித்தவாறே இருந்தது. இந்நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று மீனவர்கள் கரை திரும்பினார்கள். அப்போது வஞ்சிரம், இறால், வவ்வால், சீலா, என வித விதமான மீன்களை பிடித்து வந்தனர். இதனால் மீன்வியாபாரிகள் ஏராளமானோர் காசிமேடு துறைமுகத்தில் குவிந்தனர்.
போட்டி போட்டு ஏலம்
மீன்வியாபாரம் பல காலம் தடைபட்ட நிலையில் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் எடுத்தனர். குறிப்பாக 15 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் ரூ.5 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. அத்துடன் அதிக விலை காரணமாக மீன்கள் வாங்காமல் இருந்த பொதுமக்களும், திரண்டு வந்தனர். இதனால் காசிமேடு துறைமுகமே மக்கள் தலையாக காணப்பட்டது.