சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஆரணி! இருமுறை காந்தியடிகள் விஜயம் செய்த சில்க் சிட்டி
ஆரணி: திருவண்ணாமலை மாநகராட்சிக்குள்பட்ட ஆரணி சுதந்திர போராட்ட வேட்கையில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஆரணிக்கு பட்டு நகரம், சில்க் சிட்டி, அரிசி களஞ்சியம் என பல்வேறு பெயர்கள் இருந்தாலும் இந்த ஆரணி சுதந்திர போராட்டத்திலும் வெள்ளையர்களை வெளியேற்றுவதில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
நாட்டின் 78-ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், வீராங்கனைகள், பகுதிகள், தொகுதிகள், குறித்து பிரசுரிப்பதில் ஒன் இந்தியா தளம் பெருமைக் கொள்கிறது.

இன்று நாம் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம் என்றால் அதற்கு காரணம் சுதந்திரம்தான். அது போல் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரத்திற்கு வித்திட்டதும் இதுதான். இதனால்தான் இன்றைய தினம் மத்திய , மாநில அரசுகள் குறித்து விமர்சனங்களை செய்து வருகிறோம். இதே ஆங்கிலேயர் ஆட்சியில் இது போல் பேசினால் முதலில் துப்பாக்கி குண்டுதான் பதில் சொல்லும்.
அந்த வகையில் ஆரணியிலும் சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் சுப்பிரமணிய சாஸ்திரி. இவர் காந்திஜியின் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். அது போல் அவர் ராஜாஜியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறைச் சென்றார். மேலும் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கியதை அடுத்து சுப்பிரமணிய சாஸ்திரி தனது வழக்கறிஞர் தொழிலை கைவிட்டார்.
அதாவது ஆங்கிலேயே நீதிமன்றத்தில் பணியாற்ற மாட்டேன் என கூறிவிட்டார். இப்படிப்பட்ட தியாகிகளை கொண்ட ஆரணிக்கு காந்தியடிகள் இரு முறை வந்திருக்கிறார். 1932 ஆம் ஆண்டும் 1934 ஆம் ஆண்டும் காந்தியடிகள் ஆரணிக்கு வந்திருக்கிறார். இத்தனை பெருமைகளை கொண்டது இந்த ஆரணியாகும். சுதந்திர போராட்டத்தில் ஆரணி கோட்டை மைதானமும் பெரும் பங்குபெற்றுள்ளது.
ஆரணி என்பது ஒரு நகராட்சியாகும். ஆரணியம் என்றால் காடுகளாகும். முன்பு காடுகளாக இருந்த இந்த இடம் மருவி ஆரணி என பெயர் பெற்றது. இந்த நகராட்சி பட்டுப்புடவைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அது போல் நிறைய அரிசி ஆலைகள் உள்ளன.
ஆரணி பட்டுப்புடவை, ஆரணி அரிசி என பல்வேறு பெருமைகள் உள்ளது. இந்த ஆரணியை மாவட்டமாக அறிவிக்கக் கோரி 30 ஆண்டுகளாக கோரிக்கையை மக்கள் வைத்து வருகிறார்கள். இந்த ஆரணி கமண்டல நாகநதி ஆற்றின் கரையோரத்தில் உள்ளது. இங்கு நெசவுத் தொழில், விவசாயம், பட்டுப்புழு வளர்ப்பு, அரிசி ஆலைகள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்டவை பிரதான தொழிலாக உள்ளது.
ஆரணியில் பொன்னி அரிசி நன்றாக இருக்கும். ஆரணி பட்டுச் சேலைக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆரணி என்பது தனி கல்வி மாவட்டமாகும். இந்த கல்வி மாவட்டம் 2019ஆம் ஆண்டு உருவானது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications