காரைக்குடி பள்ளியில் சுதந்திர தின விழா - கலைநிகழ்ச்சிகள் கோலகலம்
காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

பாரதமாதா
மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரதமாதாவாக மாணவியின் வேடம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

மாணவிகளின் நடனம்
மூவர்ண உடை அணிந்து மாணவிகள் நடனமாடினர். ஆசிரியர்களும், மாணவர்களும், நடனத்தை கண்டு ரசித்தனர்.

மாணவர்கள் சாகசம்
பள்ளி மாணவர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி உற்சாகப்படுத்தினர். பிரமீடு போல அமைத்து தேசிய கொடிக்கு சல்யூட் அடித்தனர்.

மாணவர்களுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சுதந்திர தின விழா ராமநாதன் செட்டியார் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications