தலைகீழாக கொடியேற்றம், குடியரசு தின வாழ்த்து: சுதந்திர தினத்தன்று நடந்த குளறுபடிகள்
சென்னை: டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது குளறுபடிகள் நடந்துள்ளது.
69வது சுதந்திர தினம் சனிக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். மாநில தலைநகர்களில் முதல்வர்கள் கொடியேற்றி உரை நிகழ்த்தினர்.
இந்நிலையில் கொண்டாட்டத்தின்போது நாட்டின் சில பகுதிகளில் குளறுபடிகள் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு,

பஞ்சாப்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கேபினட் அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதிஹா தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியது பலரையும் வியக்க வைத்தது.

அகிலேஷ் யாதவ்
உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைநகர் லக்னோவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது கொடி கம்பத்தின் பாதியில் சிக்கிக் கொண்டது.

குடியரசு தினம்
ஹரியானா மாநில முதல்வர் கத்தார் தேசிய கொடியை ஏற்றிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக குடியரசு தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

மத்திய பிரதேசம்
மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் கௌரி ஷங்கர் ஷெஜ்வார் விதிஷாவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் உரையை வாசித்த பிறகு கிட்டத்தட்ட கீழே விழ பார்த்தார்.

கெஜ்ரிவால்
டெல்லியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது மைதானத்தின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்த மாணவர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிற உடை அணிந்திருந்தனர். சிவப்பு நிற உடை அணிந்திருந்தவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் வடிவில் அமர்ந்திருந்தனர். இதை பார்த்த மக்கள் ட்விட்டரில் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications