தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மோற்கு பருவமழை பெய்து வருகிறது. இதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வெப்பசலனம் காரணமாகவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது.

வேலூர், திருச்சி, விருதுநகரில் கனமழை பெய்து மக்கள் மனதை குளிர்வித்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தவிர கரூர், தேனி, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications