Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமரி கடற்கரை கிராமங்களில் உள்ள தாது மணல் குவாரிகளில் இன்று 2–ம் கட்ட ஆய்வு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கனிம மணல் முறைகேடு தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் சிறப்புக்குழுவினர் தொடர்ந்து 2-ஆவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் இருந்து தாது மணல் அள்ளப்படுவதில் பெரும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அரசு நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் தாது மணல் அள்ள தடை விதித்ததோடு, அங்கு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதன்படி வருவாய் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான அதிகாரிகள் குழு முதற்கட்டமாக நெல்லை மாவட்டத்திலும், பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இம்மாவட்டங்களில் மேலும் ஒரு முறை சூப்பர் செக் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருவாய் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு நெல்லை மாவட்டம் வந்து மணல் குவாரிகளில் ஆய்வு செய்தது.

இப்பணி முடிந்ததும் இக்குழுவினர் வியாழக்கிழமை இரவு குமரி மாவட்டம் வந்தனர். இங்கும் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை மிக நீண்ட கடற்கரை உள்ளது. இதில் எங்கெல்லாம் தாது மணல் உள்ளது, அதில் எந்த இடங்களில் குவாரி மற்றும் மணல் அள்ளப்படுகிறது எனபது பற்றிய விபரங்களை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் இக்குழுவினர் விவாதித்தனர். நேற்று ஆய்வு நடந்த ரஸ்தா காடு, ஆமணக்கன் விளை, கனகப்பபுரம் ஆகிய பகுதிகளிலும் சிறப்புக்குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்பு அப்பகுதி மக்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து 3 குழுக்களாக பிரிந்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

இக்கடற்கரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் நடந்தே சென்று ஆய்வு செய்தனர். பல இடங்களில் மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்த காட்சிகளை ககன் தீப் சிங் பேடி தனது 'டேப்லெட்' கருவியில் பதிவு செய்து கொண்டார். அதன்பின்பு அவர் நாகர்கோவில் திரும்பி மீண்டும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து கீழ்மிடாலம், மேல்மிடாலம் மற்றும் கொல்லன்கோடு ஆகிய பகுதிகளில், அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து செய்தனர்.

இன்று காலையில் மீண்டும் அதே இடங்களில் சூப்பர் செக் ஆய்வு தொடங்கியது. இந்தஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி மணல் குவாரிகளில் ஆய்வு செய்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினோம் என்றார்.

மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள மணல் தேரிகள், தாது மணல் அள்ளப்பட்ட இடங்களில் மீண்டும் ஒரு முறை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு இக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். அதன்பின்பு இங்கு கண்டறியப்பட்ட விபரங்களை அவர்கள் அரசிடம் அறிக்கையாக அளிப்பார்கள். அறிக்கை அளிக்கப்பட்ட பின்னரே அரசு இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+