For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 10,000 லஞ்சம் வாங்கி சிக்கிய இன்ஸ்பெக்டர்....!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் சிவகிரியில் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் என்பவர் ரூ. 10,000 லஞ்சம் வாங்கி சிக்கிக் கைதாகியுள்ளார்.

இளஞ்செழியன், நிலம் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக ஆறுமுகம் என்பவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ஆறுமுகம், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரை அணுகினார்.

Inspector arrested for accepting bribe

இதையடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.பற்குணம் தலைமையிலான போலீஸார் அறிவுரையின் பேரில் ஆறுமுகம், வேதிப் பொருள் தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை இளஞ்செழியனிடம் கொடுத்தார். இதையடுத்து மறைந்திருந்த போலீஸார் இளஞ்செழியனைக் கையும் களவுமாக கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
An Inspector was arrested for accepting bribe in Sivaigir, near Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X