நிறுத்துங்க சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மதுரை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சினைகள் குறித்த விஷயங்கள் அலசப்பட்டு வருகின்றன. இதற்காக பிரச்சனைக்குரிய இருதரப்பினரையும் நேரடியாக அழைத்து விவாதமும் நடத்தப்படுகிறது.
ஆனால் குடும்ப விஷயங்களை பொதுவில் அலசுவதுபோல உள்ளதாகவும், இதனால் தனிமனித வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
அதன்படி, விருதுநகரை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவரும் இந்த நிகழ்ச்சி குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தொடுத்து இருந்தார். அதில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுவதுபோல் உள்ளதாகவும், எனவே அந்த நிகழ்ச்சியினை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவினை பரிசீலித்த நீதிமன்றம், தனியார் தொலைக்காட்சியில் வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.