டாஸ்மாக்கை எதிர்த்து விடிய விடிய கஞ்சி காய்ச்சும் போராட்டம்.. கன்னியாகுமரி அருகே பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கோணத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி: இரணியல் கோணத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.
இரணியல் கோணம், கண்ணாட்டுவிளை போன்ற பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் அந்தப் பகுதியில் நடத்தப்படும் டாஸ்மாக் கடை முன்பு குவிந்தனர். அவர்கள் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் இரவு 10 மணி வரை நடந்தது. மேலும், கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாக சென்று சிலரை கைது செய்தனர்.
இதில், இரணியல் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், அருள்ராஜ் மற்றும் 5 பெண்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த செய்தியை கேட்டு இரணியல்கோணம் சந்திப்பில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர்.
போலீசார் கைது செய்த தங்கள் பகுதி மக்களை விடுவிக்க கோரியும், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இரணியல்-தக்கலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின.
இதையடுத்து குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இன்று அதிகாலை வரை போராட்டம் நீடித்தது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications