இப்படிப் பேசினால் விஜயகாந்த்துக்கு மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா?
சென்னை: முதல்வர் வேட்பாளர் என்று மக்கள் நலக் கூட்டணி- தேமுதிகவால் அறிவிக்கப்பட்ட விஜயகாந்த், கூட்டங்களில் பேசி வருவதைப் பார்த்தால், அவருக்கு ஓட்டுப் போட இந்தப் பேச்சுக்கள் போதுமானதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
விஜயகாந்த்துக்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து பேசி வருவோர் கூட, இன்னும் அவரது பேச்சில் தெளிவு வரவில்லையே, இப்படியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி என்ற கருத்துக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தொடர்ந்து இப்படி அரைகுறையாக பேசுவது அந்தக் கட்சியினரையும் கூட்டணிக் கட்சியின் தொண்டர்களையும் பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பேச்சில் தெளிவில்லை
சமீப காலமாக விஜயகாந்த் பேச்சில் தெளிவில்லை. கோர்வையாகப் பேசுவதில்லை. சொல்ல வருவதை முழுமையாக சொல்லி முடிப்பதற்குள் அடுத்த வார்த்தைக்குப் போய் விடுகிறார்.

எதிர்பார்ப்பு அதிகம்
அவர் மீது பலருக்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல அவரது பேச்சு இல்லை. அவரது செயல்பாடும் இல்லை.

அமைதியாக இருக்கிறார்
கூட்டத்திற்கு லேட்டாகத்தான் வருகிறார். வருகிறவர் அமைதியாக அவர் பாட்டுக்கு இருக்கிறார். அவ்வப்போது பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுகிறார். கடைசியாக அவரை பேச விடுகிறார்கள்.

பேசும் நேரம் குறைவு
அவரது பேசும் நேரமும் குறைந்து விட்டது. 10 நிமிடம், 15 நிமிடம்தான் பேசுகிறார். அவர் பேசுவதில் முக்கால்வாசி புரிவதில்லை அல்லது தேவையில்லாத பேச்சுக்களாக இருக்கிறது.

இவரா முதல்வர் வேட்பாளர்?
முத்தரசனோ, வைகோவோ, திருமாவளவனோ, ஜி.ராமகிருஷ்ணனோ இப்படிப் பேசினால் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. ஆனால் விஜயகாந்த் ஒரு முதல்வர் வேட்பாளர். அப்படி இருக்கும்போது அவர் பேச வேண்டியது அவசியம்.

முதல்வர் பதவி சாதாரணமா?
முதல்வர் பதவி என்பது பிரேமலதா விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி நினைப்பது போல அவ்வளவு சாதாரணமானதா என்ற கேள்வியும் எழுகிறது. அல்லது அந்தப் பதவியை ஜஸ்ட் லைக் தட் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

தெளிவு தேவையில்லையா?
முதல்வர் பதவி என்பது முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு. அது கடமை அல்ல, மிகப் பெரிய பொறுப்பு. ஆனால் முதல்வர் வேட்பாளர் என்று மட்டும் அறிவித்து விட்டு, அதற்கான தகுதிகளுடன் விஜயகாந்த் பேசக் கூட முடியாமல் இருப்பது போலவே தெரிகிறது.

இதை வைத்து ஓட்டுப் போடுவார்களா?
விஜயகாந்த் முகத்தைக் காட்டினால் போதும், அவர் கொஞ்ச நேரம் பேசினால் போதும் என்ற முடிவுக்கு வைகோவும் இதர தலைவர்களும் வந்திருந்தால் அது சரியா என்ற கேள்வியும் வருகிறது. விஜயகாந்த்த்தின் பேச்சை மட்டும் ஓட்டு விழும் என்று கருதினால் நிச்சயம் அப்படி எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான் கிடைக்கும்.

பேசத்தான் விடுங்களேன்
விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்.. அப்படி இருக்கும் போது அவரிடம் மக்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள். அவர் பேசுவதைக் கவனிக்கக் காத்திருப்பார்கள். அவர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை அறிய முற்படுவார்கள். ஆனால் விஜயகாந்த் அந்த மாதிரி இல்லை. அது நிச்சயம் பின்னடைவைத்தான் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications