ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்... தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத் தடுப்பு வேலிகளை உடைத்து சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தடுப்புவேலிகளை உடைத்துச் சென்று மாணவ அமைப்பினர் முற்றுகை போராட்டம் செய்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தாமிர உருக்கு ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதாரம் பறிபோவதால் அதனை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீவிரமாக மக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. பராமரிப்புக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட உரிமம் கேட்டு தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.

இதனால் மக்களின் போராட்டம் ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர், எனினும் மாணவர்கள் தடுப்புவேலிகளை உடைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், மாணவர்களின் குரல் கேட்கிறதாக மாவட்ட ஆட்சியரே என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications