இஸ்கான் பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஜன.14ல் ரத யாத்திரை
சென்னை: சென்னையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஜனவரி 14-ல் ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து இஸ்கான் ராதா யாத்திரை ஒருங்கிணைப்பாளர் என்.டி. ராவ் மற்றும் அமரேந்திர கௌர தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ரத யாத்திரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி சேத்துப்பட்டு குஜலாம்பாள் திருமண மண்டபத்தில் முடிவடையும். ரத யாத்திரை ஆர்.கே.மேடம் சாலை, ராயப்பேட்டை, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, மற்றும் கத்தீடரல் சாலை வழியாக செல்ல உள்ளது.
இதில் பத்தாயிரம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், 1966-ம் ஆண்டு சுவாமி பிரபு பாதரால் நிறுவப்பட்ட இஸ்கான் அமைப்புக்கு இந்த ஆண்டு பொன்விழா ஆண்டாகும். இந்த ரத யாத்திரையில் மதம், மொழி, இனம் பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். ரத யாத்திரையின் போது ஆயிரக்கணக்கானோருக்கு இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications