காலா படத்தை இப்போது வெளியிடுவது தவறு.. சரத்குமார் எதிர்ப்பு
தூத்துக்குடி பிரச்சனை மக்களை பாதித்து இருக்கும் நிலையில் காலா படத்தை இப்போது வெளியிட முடிவெடுத்து இருக்க கூடாது என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடி பிரச்சனை மக்களை பாதித்து இருக்கும் நிலையில் காலா படத்தை இப்போது வெளியிட முடிவெடுத்து இருக்க கூடாது என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் காலா படம் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாகி உள்ளது. இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
அதில் தூத்துக்குடி பிரச்சனை மக்களை பாதித்து இருக்கும் நிலையில் காலா படத்தை இப்போது வெளியிட முடிவெடுத்து இருக்க கூடாது. காலா பட வெளியீட்டை கொஞ்சம் தள்ளி வைத்து இருக்கலாம்.
கமல் கர்நாடக சென்று பேசியது தவறு. அவர் தன்னை மக்களின் பிரதிநிதி என்று கூறியதும் தவறும். மக்களின் பிரதிநிதி யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நீட் பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீட் தற்கொலைகளை பார்க்கும் போது, நீட் தேர்வை இன்னும் கொஞ்ச காலம் கழித்து நடத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது, என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications