கன்னடரை அண்ணா பல்கலை. துணைவேந்தராக நியமித்தது சரியான நேரம் இல்லை.. ரஜினிகாந்த்
காவிரி போராட்டம் நடக்கும் சமயத்தில் கன்னடரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்திருப்பது சரியான முடிவு இல்லை என்று ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: காவிரி போராட்டம் நடக்கும் சமயத்தில் கன்னடரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்திருப்பது சரியான முடிவு இல்லை என்று ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக எம்.கே சூரப்பா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். எம்.கே சூரப்பா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். சூரப்பா நியமனத்திற்கு தமிழக கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எம்.கே சூரப்பா குறித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். அவர் சூரப்பா நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில் ''காவிரி போராட்டம் நடக்கும் சமயத்தில் கன்னடரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்திருப்பது சரியான முடிவு இல்லை என்று ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். இது மக்கள் மனதை புண்படுத்தும்'' என்றுள்ளார்.
மேலும் ''கல்வி விவகாரத்தில் அரசியலை எப்போதுமே புகுத்தக்கூடாது. இந்த நிலையில் இந்த தருணத்தில் கர்நாடகாவை சேர்ந்தவரை அண்ணா பல்கலை. துணைவேந்தராக நியமித்திருப்பது தவறு '' என்றுள்ளார்.