நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி மகன் வீடுகளில் 2வது நாளாக வருவமான வரி சோதனை- ஆவணங்கள் சிக்கின
மதுரை: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேயர் சைதை துரைசாமி மகன், வைர வியாபாரி கீர்த்திலால் வீட்டில் 2வது நாளாக சோதனை நடைபெற்றது. 3 பேரின் வீடு, அலுவலகங்கள், நிறுவனங்கள் என 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், பல கோடி ரூபாய் பணம் சிக்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட புகார்களை தொடர்ந்து சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 40 இடங்களில் பல்வேறு நிறுவனங்கள், நகைக் கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என ஏராளமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று 9 மணி முதல் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்ததாகவும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனின் பதவி பறிக்கப்பட்டது. அவர், கட்சித் தலைமைக்கு தெரியாமல் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், பதவியை இழந்ததாக கூறப்பட்டது.
தேர்தலிலும் அவர் வழக்கமாக போட்டியிடும் நத்தம் தொகுதியை தராமல், ஆத்துார் தொகுதி ஒதுக்கப்பட்டது; அவர் தோல்வி அடைந்தார். எனினும் தேர்தலுக்குப் பின் அவருக்கு, கட்சியின் அமைப்புச் செயலர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், சில மாத இடைவெளிக்கு பின், நத்தம் விஸ்வநாதன் மற்றும் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சென்னை, அடையாறில் உள்ள நத்தம் விஸ்வநாதனின் வீடு மற்றும் உறவினர் வீடுகள், நத்தம் விஸ்வநாதனின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியில் உள்ள வீட்டிலும், நேற்று காலை துவங்கி விடிய விடிய நடந்த சோதனை இன்று அதிகாலையில் தான் நிறைவடைந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சில மாதங்களுக்கு முன்பு வெற்றி துரைசாமி, பல கோடி மதிப்புள்ள நிலம் வாங்கியதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. வழிகாட்டு மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் வாங்கப்பட்டுள்ளதா, இந்த இடம் வாங்குவதற்கான பணம் எந்த வகையில் வந்தது என்பன தொடர்பாக விசாரணை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் இன்று காலை வரை சோதனை நடத்தப்பட்டது.
சென்னை அபிராமபுரம், கோவை ஆகிய இடங்களில் உள்ள கீர்த்திலால் என்பவரின் நகைக்கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஆவணங்கள், பணம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications