Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கோட்டை அருகே தனியார் மர அறுவை ஆலைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு

செங்கோட்டை அருகே தனியார் மர அறுவை ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை : செங்கோட்டை அருகே உள்ள பிரபல தனியார் மர அறுவை ஆலைகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள பிரானூர் பார்டரில் நுற்றுக்கணக்கான தனியார் மர அறுவை ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகளுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கப்பல் மூலம் கண்டெய்னர்கள் மூலம் மரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு மரங்கள் சைஸ் வாரியாக அறுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

IT Officials raid in Wood Saw mills at Sengottai Thirunelveli Dsitrict

இங்குள்ள மர அறுவை ஆலைகளில் மிகவும் பிரபலமானது பிரபாத் அறுவை மில்,விஸ்வம் எக்சிம் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள். இந்த நிறுவனத்தினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மர அறுவை ஆலைகளை நடத்திவருகின்றனர்.மேலும் சர்க்கரை ஆலையையும் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் நிறுவனங்களில் ஏற்றுமதி,இறக்குமதி முறைகேடுகள் நடப்பதாகவும் முறையான கணக்குகளை காட்டாமல் இருப்பதாகவும் வருமானவரித் துறையினருக்கு புகார்கள் வரவே நெல்லை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கொல்லம், ஆகிய பகுதிகளில் இருந்து 5 வாகனங்களில் 15க்கும் மேற்ப்பாட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் அந்த ஆலைகளுக்கு வந்துள்ளனர்.

IT Officials raid in Wood Saw mills at Sengottai Thirunelveli Dsitrict

தற்போது மேற்கண்ட நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.இந்த சோதனையில் வாகனங்கள், நிலங்கள், தங்கம், இருப்பிலுள்ள மரங்கள் ஆகியவற்றையும் ஆய்வுசெய்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+