ஆவடி அதிமுக நிர்வாகி வீட்டில் ஐ.டி. ரெய்டு... பணம் கொடுத்த ஓசூர் அதிமுக கவுன்சிலர் கைது
சென்னை: சென்னை ஆவடியில் உள்ள அதிமுக வட்டச் செயலாளர் முனுசாமியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை ஆவடியில் வசிக்கும் அதிமுக வட்டச் செயலாளர் முனுசாமியின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். 5 பேர் கொண்ட குழு இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
முன்னதாக ஓசூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 36வது வார்டு அதிமுக கவுன்சிலர் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.2.6 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே அரவக்குறிச்சி தொகுதி அதிமுக நிர்வாகி அன்புநாதனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications