3 நாள் விடிய விடிய.. செந்தில் பாலாஜியின் பொள்ளாச்சி நண்பர் நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு
பொள்ளாச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த் என்பவரது இல்லத்தில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்து இருக்கிறது.
கரூர், கோவை, சென்னை, ஐதராபாத் உட்பட தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை தொடங்கினர். அதேபோல் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அத்துடன் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை தொடங்கிய சோதனை 4 வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அதிக செல்வாக்கு கொண்ட அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை கரூரில் வருமான வரி சோதனையில் ஈடுபட சென்ற ஐடி அதிகாரிகளின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை சோதனையிட சென்ற பெண் அதிகாரி காயத்ரி, சுனில் குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாச ராவ் ஆகிய 4 வருமான வரித்துறை அதிகாரிகள் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்களை திமுகவினர் தாக்கியதாக காவல் நிலையத்தில் அவர்கள் புகாரளித்து உள்ளனர்.
அதன் பேரில் திமுகவினர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் திமுகவினர் அளித்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஐடி அதிகாரிகளை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட திமுகவினர் 8 பேரையும் காவல்துறை கைது செய்தது.
இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐடி வரித்துறை அதிகாரிகள் தஞ்சமடைந்தனர். வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு சீல் வைத்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து திமுகவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சற்று நேரத்தில் அங்கு மேயர் வந்ததால் சீல் அகற்றப்பட்டது. இருப்பினும் கரூரில் ஐடி அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டன. வருமான வரித்துறை அதிகாரிகளின் புகாரை தொடர்ந்து கரூரில் வருமான வரி சோதனை நடைபெற்ற இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

சிஆர்பிஎப் வீரர்களும் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க குவிக்கப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய ஐடி ரெய்டு சில இடங்களில் நிறைவடைந்த நிலையில் 4 நாளாக இரவு பகல் பாராமல் மற்ற இடங்களிலும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பரான சங்கர் ஆனந்த் என்பவரது எம் சாண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்து உள்ளது. நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
-
கரூர் கூட்ட நெரிசல்! திட்டமிடப்பட்ட சதியா? செந்தில் பாலாஜியிடம் பல மணி நேரம் தொடர்ந்த சிபிஐ விசாரணை -
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
Senthil Balaji: கரூர் சம்பவம்.. 6 மணி நேரம் நடந்த விசாரணை.. சிபிஐ கேட்டது என்ன? செந்தில் பாலாஜி கொடுத்த பதில் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்!












Click it and Unblock the Notifications