For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் ஐடி ரெய்டு: ரூ1 கோடி ரொக்கம் சிக்கியது!

செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கரூர்: தினகரன் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் உறவினர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ1 கோடி சிக்கியது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கரூரில் 8 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்கள் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகள் ஆகும்.

IT raid in SenthilBalaji house

ராமகிருஷ்ணா நகர், தான்தோன்றிமலை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

குடகு ரிசார்ட்டில் தங்கியிருந்த செந்தில் பாலாஜி தற்போது தலைமறைவாக உள்ளார். மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கிறார் செந்தில் பாலாஜி. எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் முன்ஜாமீன் கோரியிருக்கிறார் செந்தில் பாலாஜி

தொடரும் சோதனை- ரூ1 கோடி பறிமுதல்

இந்த சோதனை 7 மணிநேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது. சில இடங்களில் சோதனை முடிவடைந்ததாக கூறப்பட்டது. இந்த சோதனைகளின் போது செந்தில் பாலாஜியின் உறவினர் ஒருவர் வீட்டில் ரூ1 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

English summary
IT Raid at Senthil Balaji house in Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X