தினகரனின் புதுவை ரகசிய பண்ணை தோட்டம் , கோவை ஆறுமுகசாமி வீடுகளில் ஐடி ரெய்டு நிறைவு!
கோவை தொழிலதிபர் ஆறுமுகசாமி வீடு மற்றும் சசிகலாவின் மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளது.
கோவை/புதுவை: தினகரனின் புதுவை பண்ணை வீடு மற்றும் கோவை தொழிலதிபர் ஆறுமுகசாமியின் வீடுகளில் வருமான வரிச் சோதனை நிறைவடைந்துள்ளது.
சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள், அவரது உறவினர்கள் உள்ளிட்டோரின் இடங்கள் என நாடு முழுவதும் 190 இடங்களில் இன்று வருமானத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் 12 மணிநேரத்தைக் கடந்தும் நடைபெற்றது.

கோவையில் மணல் ஒபப்ந்ததாரர் ஆறுமுகசாமியின் வீட்டில் சோதனை நிறவைடந்தது. ஆனால் வருக்கு சொந்தமான அலுவலகங்கள், இடங்களில் சோதனை நீடித்தது.
அதேபோல் தினகரனுக்கு சொந்தமான புதுவை பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த பண்ணை வீடு தினகரனுடையதுதான் என்பது அப்பகுதி மக்களுக்கே தெரியாத ரகசியமாக இருந்து வந்தது.
இந்த பண்ணையில் ஒரு அறையை மட்டும் சீல்வைத்துவிட்டு அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications