கண் கலங்க வைத்த அனிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக மக்களை கடந்த ஆண்டு உருக வைத்து விட்டுப் போனவர் கண்மணி அனிதா.
அரியலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி சண்முகம் என்பவரின் மகளான அனிதா, அரசுப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 478 மதிப்பெண்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்களும் பெற்றார். இளம் வயதிலேயே மருத்துவ சிகிச்சை செய்ய முடியாமல் தாயை பறிகொடுத்த அனிதா, தான் மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய நினைத்தார்.

நாடு முழுவதும் 2017ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு எழுதி அதில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications