ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி.. தமிழிசை திட்டவட்டம்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தலில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பாஜக போட்டியிடுவது இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று தினத்தந்திக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி என கூறியியிருந்தார்.
‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது உறுதி’’https://t.co/E4dWf3IlWX
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 28, 2017
இன்று அந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications