அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார்... சொல்கிறார் நக்மா!
அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார். ரஜிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது நடிகர் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்ததாக அவர் கூறினார். ரஜினியுடனான சந்திப்பில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அரசியலுக்கு வரவேண்டும்
ரஜினிகாந்த் ஏதாவது கட்சியில் சேருவதோ அல்லது புதுக் கட்சி தொடங்குவதோ அவரது விருப்பம் என்றும் நக்மா கூறினார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது தமது விருப்பம் என்றும் நக்மா தெரிவித்தார்.

நிறைய எதிர்ப்பார்ப்பு..
ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற வேண்டும் என்றும் நக்மா கூறினார். ரஜினியிடம் மக்கள் நிறைய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர் என்றும் நக்மா தெரிவித்தார்.

வளையல் போராட்டம்
ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என நக்மா நம்பிக்கை தெரிவித்தார்.மோடிக்கு வளையல் அனுப்பும் போராட்டம் என்பது பதிலடிதான் என்றும் அவர் கூறினார்.

அதிக வீரர்கள் உயிரிழப்பு
காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட தற்போது எல்லையில் அதிக வீரர்கள் உயிரிழக்கின்றனர் என்றும் நக்மா தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூர்நிலையில் ரஜினிகாந்துடன் காங்கிரஸ் கட்சியின் நக்மாவின் சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications