காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது.. சொல்கிறார் திருநாவுக்கரசர்!
காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கான காவிரி நீரை உச்சநீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உத்தரவிடப்பட்ட 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சி நீராக குறைத்துஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் தலைவர்களும் விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரிக்கு எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்புதான் என்றும் அவர் கூறினார். நிலத்தடி நீரை கணக்கிட்டு கர்நாடகாவுக்கு கூடுதல் நீர் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் நிலத்தடி நீர் இப்போது இல்லை என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications