ஐயப்பன் கோவில் தங்க ஆபரணப் பெட்டிக்கு செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு
செங்கோட்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க ஆபரணப் பெட்டிக்கு செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முக்கியமானது சபரிமலை ஐயப்பன் கோவிலும் ஒன்று. ஆண்டுத்தோறும் அச்சன்கோவில் ஐய்யப்பன் கோவிலில் மார்கழி மாதம் 1ம் தேதி கொடியேற்றத்தோடு மண்டலபூஜை திருவிழாத் தொடங்குவது வழக்கம்.

அதற்காக இங்குள்ள அய்யப்ப சாமிக்கு அணிவிப்பதற்காக புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து ஐயப்பனின் தங்க அங்கி, உடம்பு கவசம், தங்க வாள், ஊஞ்சல் உள்ளிட்ட பொருட்கள் அங்கிருந்து பலத்தப் பாதுகாப்போடு எடுத்துவரப்பட்டன.

ஆரியன்காவு ஐயப்பன் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் செங்கோட்டை, தென்காசி, பண்பொழி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் திரண்டு நின்று ஐயப்பனின் திரு ஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். -












Click it and Unblock the Notifications