தென் சென்னை திமுக மாவட்டச் செயலாளர் அன்பழகன் தாயார் மரணம்-கருணாநிதி அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தாயார் ஜெ.பூரணி அம்மாள் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் உள்ள ஜெ. அன்பழகனின் வீட்டில் இன்று காலை 5 மணியளவில் காலமானார் பூரணி அம்மாள். தகவல் அறிந்ததும், திமுக தலைவர் கருணாநிதி அன்பழகன் வீட்டுக்கு விரைந்து சென்று பூரணி அம்மாள் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அன்பழகன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
கருணாநிதியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். திமுக முன்னணியினரும், நிர்வாகிகளும் அன்பழகனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications