நீட் தேர்வு காவு கொண்ட அரியலூர் அனிதா குடும்பத்துக்கு தீபா நேரில் ஆறுதல்!
திருச்சியில் தினகரன் நடத்திய ஆர்ப்பாட்ட பொதுக் கூட்டத்தில் சேர்ந்த கூட்டம் பணத்துக்காக சேர்ந்த கூட்டம் என்று ஜெ.தீபா விமர்சித்துள்ளார்.
திருச்சி: நீட் தேர்வில் உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஜெ.தீபா ஆறுதல் தெரிவித்தார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி திருச்சியில் பொதுக் கூட்டத்தை நேற்று தினகரன் நடத்தினார். இந்நிலையில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க ஜெ.தீபா அரியலூர் சென்றார்.

அங்கு அவர் அனிதாவின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்துள்ளேன்.
தினகரனுக்கு நேற்று பொதுக் கூட்டத்தில் சேர்ந்த கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. அது பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம். மக்களின் வரிப் பணத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரயப்படுத்தி வருகிறார். எங்களிடம் பொதுக் கூட்டம் நடத்துவதற்கெல்லாம் பணம் கிடையாது. மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து போராடுவோம் என்றார் தீபா.












Click it and Unblock the Notifications