திடீர் ஸ்டைலுக்கு என்ன காரணம்?... குபீர் சிரிப்புடன் மனம் திறந்த தீபா!
கடந்த ஒரு மாதமாக உடை, அலங்காரத்தில் மாற்றம் இருப்பது குறித்து ஜெ. தீபா மனம் திறந்திருக்கிறார்.
Recommended Video

சென்னை : கடந்த ஒரு மாதமாக ஜெ. தீபாவின் நடை, உடை, அலங்காரத்தில் வந்துள்ள மாற்றம் குறித்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா மனம் திறந்து கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் தனக்கு என்ன தோன்றுகிறதோ அது தான், ஸ்டைல், மற்றவர்களைப் பார்த்து எனக்கு காப்பியடிக்கத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜெ. பிறந்தநாளில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு தனிக் கட்சித் தொடங்குவதாக ஜெ.தீபா அறிவித்தார். அதிமுக தலைமையில் குழப்பம் இருந்த போது அவரை அந்த பொறுப்பிற்கு கொண்டு வருவதற்காக ஒரு சில அதிமுகவினர் முயன்றனர்.
இதற்காக மாவட்டந்தோறும் ஜெ. தீபா பேரவை எல்லாம் தொடங்கப்பட்டது. ஆனால் தெளிவற்ற தீபாவின் நிலையால் அவரது பேரவைக்குக் கூட ஆட்களை சேர்ப்பதே சிரமமாகிப் போனது. இருப்பினும் தான் தொடங்கிய பேரவையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஜெ. தீபா.

மரியாதையை குறைத்துக் கொண்ட தீபா
போயஸ் கார்டன் பிரச்னையில் சகோதரர் தீபக் மற்றும் சசிகலாவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதால் அவர் மீது இருந்த மரியாதை மேலும் குறைந்தது. இந்நிலையில் சமீப காலமாக அவரது தோற்றத்தில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன.

எப்படி இருந்த தீபா?
மீடியாக்களின் பார்வைக்கு வந்தது முதலே தீபா என்றால் சல்வார் போட்டுக்கொண்டு எப்போதும் மேலே ஒரு ஓனியை போர்த்திக் கொண்டு தான் இருப்பார் தீபா. அதே போன்று ஹேர்ஸ்டைலிலும் பெரிதாக கவனம் செலுத்தமாட்டார். முடியை தூக்கிவாறி கிளிப் போட்டுக் கொண்டு வழிந்த முகத்துடன தான் எப்போதும் இருப்பார்.

புதிய லுக்கில் தீபா
ஆனால் கடந்த ஒரு மாத காலமாகவே அவரது உடை மற்றும் சிகையலங்காரத்தில் சில மாற்றங்கள் வந்துள்ளன. பளிச் நிற சேலைகளில் வித்தியாசமான ஹேர்ஸ்டைல்கிளில் வலம் வருகிறார் தீபா.

மாற்றத்திற்கு என்ன காரணம்?
இன்று ஆர் கே நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கும் ப்ரீஹேர் ஸ்டைலில் எடுப்பான நிறத்தில் சேலையும் அணிந்து வந்திருந்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தீபாவிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

யாரையும் காப்பியடிக்கவில்லை
அதற்கு பதிலளித்த தீபா சிரித்துக்கொண்டே எதையும் திட்டமிடுவதில்லை. அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அந்த கெட்டப்பில் தான் நான் வருவேன். எனக்கென்று தனியாக எந்த உடையலங்காரமும் இல்லை. அதே சமயம் யாரையும் காப்பியடிக்கவும் நான் விரும்பவில்லை என்று தீபா தெரிவித்தார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications