சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் மனு கொடுக்க சென்ற தீபா ஆதரவாளர்கள் கைது
சசிகலா முதல்வராக பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்ற தீபா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலா முதல்வரா அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தீபாவின் ஆதரவாளர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
சசிகலா முதல்வராக பதவியேற்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் ஆதரவாளர்கள் சசிகலா முதல்வராக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று தான் வாக்களித்தோம். சசிகலாவுக்கு அல்ல என்றனர். மேலும் தமிழக முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என்றும் அவர்கள் கூறினர்.
மேலும் சசிகலா முதல்வராக அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை முதல் ஆளுநர் மாளிகை வரை அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications