அத்தை தொகுதியில் முதல்முறையாக களம் கண்டு சாதிப்பாரா தீபா?
ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபா முதல்முறையாக தேர்தல் களம் காண்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே.நகர் தொகுதியில் அவரது அண்ணன் மகளான தீபா போட்டியிடுவாரை என கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது.
காலியான சட்டசபை தொகுதிக்கு அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். ஜெயலலிதா மறைது மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் தேர்தல்
அதன்படி அடுத்தமாதம் 12 ஆம் தேதி ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது.

அரசியலில் இறங்கியுள்ள தீபா
இந்நிலையில் புதிதாக பேரவை தொடங்கி அரசியலில் கால் வைத்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா அந்த தொகுதியில் போட்டியிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உருவ தோற்றத்தில் ஜெயலலிதா போல இருக்கும் தீபாவுக்கு சசியின் எதிர்ப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்���னர்.

நிரந்தர தொகுதியாக்குவார்?
தீபா தனியாக பேரவை தொடங்குவதற்கு முன்பே ஆர்கே.நகர் தொகுதி மக்கள் தங்கள் தொகுதியில் தீபாதான் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர் பேரவை தொடங்கியப் பிறகும் அவரை சந்தித்த ஆர்கே நகர் தொகுதி அதிமுக மகளிர் அணியினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரை தீபா தனது நிரந்தத தொகுதியாக்கி கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தீபாவுக்கு ஆதரவு
அதற்கு ஆர்கே நகர் தொகு அதிமுக மகளிர் அணியினர் முழு ஆதரவு தருவதாகவும் உறுதியளித்தனர். தற்போது இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

அத்தை தொகுதியில் சாதிப்பாரா?
அத்தை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு அத்தைப்போல் சாதிப்பாரா தீபா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு தீபாவும் தேர்தல் முடிவும்தான் பதில் சொல்ல வேண்டும்...












Click it and Unblock the Notifications