தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது -ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
செங்கல்பட்டு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

நாளுக்கு நாள்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் ஆயிரங்களிலேயே தொடர்வதால், மக்கள் மத்தியில் ஒரு வித அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தரப்பில் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் நோயின் பரவலை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

படிப்படியாக குறைகிறது
இந்நிலையில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதாகவும், அரசு விதிமுறைகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா என்றாலே பீதியடையத் தேவையில்லை என்றும் ஆரம்பக்கால அறிகுறி தெரிந்தவுடன் அதற்கான சோதனைகளை நடத்தி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மீளமுடியும் என நம்பிக்கை அளித்துள்ளார்.

வேண்டுகோள்
கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்றும், முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், அத்தியாவசிய பணிகளின்றி வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை பின்பற்றினாலே கொரோனா தொற்றை பெருமளவில் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

சிகிச்சை முறைகள்
முன்னதாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் முறைகளை கேட்டறிந்த அவர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் ஆய்வு நடத்தினார். இனி வரும் காலங்களில் தமிழகத்தின் மற்ற ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வுக்கு செல்வார் எனக் கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications