மெரீனாவை உலுக்கிய ஜல்லிக்கட்டு புரட்சி போல அண்ணா சாலையை முடக்கிய ஐபிஎல் எதிர்ப்பாளர்கள்
கடந்தாண்டு ஜனவரியில் சென்னை மெரீனா கடற்கரை பகுதி மிகப் பெரிய போராட்டக் களமாக மாறியது. இன்று ஐபிஎல் புரட்சி வெடித்துள்ளது.
Recommended Video

சென்னை: கடந்தாண்டு ஜனவரியில் சென்னை மெரீனா கடற்கரை பகுதி மிகப் பெரிய போராட்டக் களமாக மாறியது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கோரி மெரினாவில் இளைஞர்கள் குவிந்தனர். அது மிகப் பெரிய அளவில் வேகமெடுக்க மாநிலம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்தன. மெரினாவில் 23ம் தேதி வரை நடந்த அமைதியான போராட்டம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைக்க செய்தது. தற்போது அதே மெரினாவை ஒட்டியுள்ள அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் போட்டி நடத்தக் கூடாது என்று போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. சென்னையில் இன்று இரவு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், டோணி தலைமையிலான சிஎஸ்கே விளையாட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்க உள்ளது.

இதனிடையில், காவிர் மேலாண்மை வாரியம் கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போட்டியை நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர். அதன்படி, தற்போது சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் அண்ணா சாலையே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.
கடந்தாண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மெரீனாவில் போராட்டம் நடந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து நடந்த அந்த போராட்டத்தின் முடிவில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது
தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் குறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போட்டியை யாரும் நேரில் பார்க்காமல் இருந்தால், அது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று கருத்து கூறப்பட்டது. தற்போது நடந்து வரும் போராட்டங்களால், அனைத்து ஆங்கில டிவிக்களும் இது குறித்த செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் என்று சமூகதளங்களிலும், ஐபிஎல் எதிர்ப்பு போராட்டமே முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications