ஜல்லிக்கட்டு... உச்சநீதிமன்றத்தை கைகாட்டி விட்டு தமிழகத்திற்கு கைவிரித்தது மத்திய அரசு! #jallikattu
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே அடுத்த நடவடிக்கை என்கிறார் மத்திய அமைச்சர் அனில் தவே.
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்தே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு பொங்கலின் போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னையில் தொடங்கிய இந்த பேரெழுச்சி மதுரை, நெல்லை, கோவை என நீண்டு கொண்டிருக்கிறது.
மாணவர்கள் வீதிகளில் இறங்கி தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வந்துவிடும். அந்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. எந்த போராட்டமாக இருந்தாலும் வன்முறையற்ற வகையில் நடந்தால் அதை வரவேற்போம்.
உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு என்ன என்பது தொடர்பாக முழுமையாக மத்திய அரசு விவரித்துள்ளது. அந்த தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications