ஜல்லிக்கட்டுக்கு வழியில்லை.. அடிமாடாய் போகும் “காளைகள்” – இறைச்சிக்காக விற்கப்படும் அவலம்
மதுரை: மதுரை சுற்றுவட்டார ஜல்லிக்கட்டு காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் அவல நிலைக்கு மாடு வளர்ப்போர் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறாக விற்கப்படும் காளைகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை சுற்றுவட்டார பகுதிகளான அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது ஜல்லிக்கட்டு. இதற்காக மாடுபிடி வீரர்களும், காளைகளும் போட்டி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே தங்களை தயார்படுத்தி கொள்வார்கள். காளை வளர்ப்பவர்கள் அதற்கென தனிக்கவனம் செலுத்தி பராமரித்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வீர விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு வீரர்களும், காளை வளர்ப்போரும் தடையை நீக்கி மீண்டும் விளையாட்டை தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன.
ஆனாலும் தடை நீக்கப்படாததால் இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட எங்குமே ஜல்லிக்கட்டுகள் நடத்த முடியவில்லை.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்காக பராமரித்து வந்த காளைகளை பராமரிக்க முடியாமல் மாடு வளர்ப்போர், காளைகளை விற்க முடிவு செய்து வாடிப்பட்டி வார சந்தைக்கு கொண்டு சென்று விற்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இந்த சந்தைக்கு கேரளா வியாபாரிகள் இறைச்சிக்காக மாடுகள் வாங்க வருவது வழக்கமான ஒன்றாகும்.
ஜல்லிக்கட்டு காளைகளும் இங்கு விற்கப்பட்டு வருவதால் இறைச்சிக்காக அந்த மாடுகளையும் வியாபாரிகள் வாங்கி செல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு ஒரு ஜல்லிக்கட்டு காளை ரூபாய் 50 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது காளைகளின் விலை அடிமாட்டு அளவுக்கே அதாவது, ரூபாய் 10 ஆயிரம், ரூபாய் 15 ஆயிரத்துக்கு விற்கப்படும் பரிதாபத்திற்கு மாடு வளர்ப்போர் தள்ளப்பட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications