ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை அடித்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீஸ்
சென்னை சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் போராட்டம் நடத்திய மாணவர்களில் சிலரை போலீசார் அடித்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்து உள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் சென்னை மெரினா கடற்கறையில் நேற்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 40 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மெரினா கடற்கறைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சோழிங்கநல்லூரில் உள்ள ஜேப்பியார் குழும கல்லூரி மாணவர்கள் ஜங்சன் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர்.
மாணவர்கள் பழைய மகாபலிபுரம் சாலையில் தொடர்ந்து அமர்ந்திருக்கவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. மாணவர்கள் சிதறி ஓடியதால் அந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தர தரவென இழுத்துச் சென்று போலீசார் கைது செய்ததாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசாரின் செயலுக்கு மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினர்.
அலங்காநல்லூரில் தடியடி நடத்தி கைது செய்ததால் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications